உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடிக்கடி விபத்து நடக்கும் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி., ஆய்வு

அடிக்கடி விபத்து நடக்கும் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி., ஆய்வு

குளித்தலை: குளித்தலையில் கருர்-திருச்சி, கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடம்பர் கோவில், பரிசல் துறை பகுதியில் அடிக்கடி சாலை விபத்-துகள் ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. விபத்துகளை தடுக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கையாவிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்-தனர்.இதையடுத்து, குளித்தலை தேசிய நெடுஞ்சா-லையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படாத வகையில், மாயனுாரில் இருந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு வரையுள்ள சாலையை அகலப்படுத்தியும், சாலை நடுவே பேரிகார்ட் அமைப்-பது.குளித்தலை பகுதிகளில் விபத்தை தடுக்க, சாலை நடுவே பிளாஸ்டிக் தடுப்புகள் வைக்க நட-வடிக்கை எடுப்பது. மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில், உயர் மின் கோபுரம் அமைக்கவும், மாவட்ட நிர்வாகம் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என, எஸ்.பி.,ஜோஸ் தங்கையா தெரிவித்தார்.ஆய்வின் போது டி.எஸ்.பி., செந்தில்குமார். இன்ஸ்பெக்டர் கரு-ணாகரன், எஸ்.ஐ.. பாஸ்கர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை