மேலும் செய்திகள்
மண் கடத்திய லாரி பறிமுதல்
10-Feb-2025
எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஆர்.ஐ., முனியப்பன் மற்றும் அலுவலர்கள், ஜெ.காரப்பள்ளி கூட்ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஜெ.காரப்பள்ளியில் இருந்து ஓசூருக்கு, 6 யூனிட் எம்.சாண்டை கொண்டு செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
10-Feb-2025