உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு, 800 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இன்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த இரண்டு மாதமாக நீர்வரத்து வினாடிக்கு, 200 கன அடியாக சரிந்துள்ளது. இதனால், அங்குள்ள ஐவர்பாணி, அதன் கிளை ஆறுகள், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் முற்றிலுமாக நீரின்றி, வறண்டு காணப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாறு ஆங்காங்கே குட்டைப்போல் காட்சி அளித்தது.இந்நிலையில். கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 200 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 800 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது. இதனால் வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ