மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
23 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
23 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
23 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
23 hour(s) ago
கிருஷ்ணகிரி : தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத, 55 நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:தொழிலாளர் தினமான நேற்று, சட்ட விதிகளின்படி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் தலைமையில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 46 கடைகள், 35 உணவு நிறுவனங்கள் மற்றும் 8 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 89 நிறுவனங்களில், சட்ட விதிமுறைகளை பின்பற்றாத, 25 கடைகள், நிறுவனங்கள், 26 உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 4 என மொத்தம், 55 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago