உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முன்னாள் படைவீரர் கேன்டீன் இடமாற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

முன்னாள் படைவீரர் கேன்டீன் இடமாற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ண-கிரி:முன்னாள் முப்படை வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கையர் நலச்சங்கம் சார்பில், கேன்டீனை இடமாற்றம் செய்வதை கண்டித்து, கிருஷ்ணகிரி முன்னாள் ராணுவத்தி-னருக்கான கேட்டீன் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டனர்.சங்க தலைவர் கேப்டன் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமரேசன், துணைத் தலைவர் காளியப்பன், துணை செய-லாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சென்றாயன் நன்றி கூறினார். இதில், 36 சங்க தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், தற்போதுள்ள கேன்டீன் போக்-குவரத்திற்கும், வயதானவர்களுக்கும் வசதியாக உள்ளதால், ஒரப்பம் அருகே இடமாற்றம் செய்யக்கூடாது. கிருஷ்ணகிரியில் இருந்து தற்காலிக-மாக அமைக்கும் கேன்டீனுக்கு, 20 கி.மீ., சென்று வர வேண்டியுள்ளதால், 60 வயதுக்கு மேற்பட்ட-வர்கள் டூவீலரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று வர முடியாது. தற்காலிக கேன்டீன் அருகே எந்த பாதுகாப்பு வசதியும் இல்லை. ஏரி, குட்டை, சுடுகாடு என பாதுகாப்பற்ற இடமா-கவும், பஸ் நிறுத்தம் இன்றி, ஆட்டோ போன்ற போக்குவரத்து வசதியும் இல்லை. வயதான-வர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடி-யாது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கேன்டீன் பாதுகாவலர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை