| ADDED : ஜூலை 15, 2024 12:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள நுாலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தில், தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நக-ராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கேப்ரியல் சுந்தர் பேசினார். துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் மாதேஸ்வரன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்-டனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடக்கும் இந்நி-கழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் போட்டி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறும், அதற்கேற்ற நுால்களும், கற்றுக் கொடுக்க அறிஞர்கள் உள்ளதாவும், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தெரிவித்தார்.