உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரைக்கு செல்ல 3 பஸ்கள் மாற வேண்டிய அவல நிலை

மதுரைக்கு செல்ல 3 பஸ்கள் மாற வேண்டிய அவல நிலை

பேரையூர் : பேரையூர் - மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு நேரடி அரசு பஸ் வசதியில்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.பேரையூரில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் 48 கி.மீ., தொலைவில் உள்ளது. அரசு பஸ்சில் செல்ல இரண்டரை மணி நேரமாகும். டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், பெரியார் பஸ் பஸ்ஸ்டாண்ட் என 3 பஸ்களுக்கு மாறிச்செல்ல வேண்டியுள்ளது. மதுரைக்கு செல்லும்போது கூட அதிக சிரமம் இருக்காது. ஆனால் வேலை முடிந்து திரும்பும்போது ஒருபுறம் சோர்வு, மறுபுறம் கையில் லக்கேஜ் உடன் பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து, திருமங்கலம் பின் தங்களது ஊருக்கு திரும்ப அவதிப்படுகின்றனர்.பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து டி.கல்லுப்பட்டி வரை இயங்கும் பஸ்களை பேரையூர் வரை நீட்டித்தால் மக்கள் பயனடைவர். இதனால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.ஆனால் அதிகாரிகள் தரப்பில் சில விதிகளை கூறி 'இயக்க முடியாது' என்கின்றனர். பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு நேரடி பஸ் இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை