உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

மதுரை: மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி ஆராய்ச்சி நிறுவனத்தின் வேலை வாய்ப்பு மையம் மற்றும் மதுரை டைம் நிறுவனம் சார்பில் மேலாண்மைக் கல்வி, வங்கித் துறை நோக்கம், தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை இணைப்பேராசிரியர் கற்பகபாண்டி வரவேற்றார். முதல்வர் காஞ்சனா தலைமை வகித்தார். குடும்பவள மேலாண்மை மற்றும் நுகர்வோர் அறிவியல் துறைத்தலைவர் விஜயலட்சுமி, ஆடை அலங்காரவடிவமைப்பு துறைத்தலைவர் சசிதேவி முன்னிலை வகித்தனர். மாணவர்களின் உதவித்தொகைக்கான தகுதித் தேர்வை டைம் நிறுவன மாணவர் மேலாண்மை கல்வி வகுப்பாளர் வீரக்குமார் நடத்தினார். வேலை வாய்ப்பு மைய அலுவலர் ஜெயசீலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை