உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இரண்டாவது திருமணம் கேட்ட தம்பி கொலை அண்ணன், தந்தை கைது

 இரண்டாவது திருமணம் கேட்ட தம்பி கொலை அண்ணன், தந்தை கைது

உசிலம்பட்டி: நவ. 16--: உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி 31. லாரி டிரைவரான இவர், மனைவியிடம் விவாகரத்து பெற்று 5 ஆண்டுகளாக தனியாக வசித்தார். இரண்டாவது திருமணம் செய்து வைக்கும்படி தந்தை போஸிடம் 60, அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தந்தையை தாக்கினார். இதை தட்டிக்கேட்ட அண்ணன் செல்லப்பாண்டியை 35, அரிவாளால் வெட்டியதில் கையில் காயம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற அண்ணனும், தந்தையும் சேர்ந்து அரிவாளை பறித்து வெட்டியதில் ராஜபாண்டி இறந்தார். அண்ணன், தந்தை கைது செய்யப் பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை