மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 4(தெற்கு) அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் பிப்.,13 காலை 9:00 மணிக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடக்கிறது. செல்லுார், ஆழ்வார்புரம், ஐராவதநல்லுார், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளி வீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் வார்டு மக்கள் குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயர் மாற்றம், சொத்துவரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.