உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மல்லிகை விலை மயக்கம் தருது வாசமில்லா மலர் கிலோ ரூ.2000

மல்லிகை விலை மயக்கம் தருது வாசமில்லா மலர் கிலோ ரூ.2000

மதுரை, : மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று மல்லிகை கிலோ ரூ.3000க்கு விற்கப்பட்டது.சீசன் இன்றி வரத்து குறைந்ததால் மல்லிகை கிலோ ரூ.2000 வரை விற்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கிலோ ரூ.3000க்கு விற்பனையானது. பிச்சி, முல்லை, வாசமில்லா மெட்ராஸ் மல்லி கிலோ ரூ.2000க்கு விற்கப்பட்டது.அரளி ரூ.450, நாட்டுரோஸ் ரூ.300, பட்டன்ரோஸ், சம்மங்கி, செவ்வந்தி கிலோ ரூ.250க்கும், செண்டுமல்லி ரூ.100க்கும் விற்பனையானது. வழக்கமாக கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை விற்கப்படும் மரிக்கொழுந்து, துளசி உட்பட மற்ற பூக்களின் விலையும் இருமடங்காக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை