உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை

நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 163 விவ-சாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 20,440 கிலோ காய்கறிகள், 4,550 கிலோ பழங்கள், 30 கிலோ பூக்கள், 460 கிலோ இதர காய்கறிகள், என, மொத்தம், 25,480 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 4,850 நுகர்வோர் வாங்கி சென்றனர்.அதன் மூலம், 10 லட்சத்து, 63,950 ரூபாய்க்கு விற்பனையா-னது. தக்காளி கிலோ, 32 ரூபாய், கத்தரி, 72, வெண்டை, 40, சின்ன வெங்காயம், 50, பெரிய வெங்காயம், 46, இஞ்சி, 200 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி