உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்காச்சோள வீரிய விதைக்கு மானியம்

மக்காச்சோள வீரிய விதைக்கு மானியம்

நாமகிரிப்பேட்டை,: நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமாமகேஸ்-வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்காச்சோளம் பயிரிடும் விவ-சாயிகளுக்கு மானிய விலையில் வீரிய விதை மக்காச்சோளம், இயற்கை உரம், வழங்கப்பட உள்ளது. வேளாண்மை துறை மூலம் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது, அதில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நாமகிரிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவ-சாயிகளுக்கு பயிரிட தேவையான வீரிய மக்காச்சோள விதைகள், இயற்கை உரம், உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. எனவே மக்காச்-சோளம் பயிரிட ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் விரிவாக்கம் மையத்தை தொடர்பு கொண்டு வீரிய விதை, உரங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை