உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வயதான தம்பதி விபரீத முடிவு

வயதான தம்பதி விபரீத முடிவு

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே கள்ளிபா-ளையம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து, 85; விவசாயி; மனைவி தங்கம்மாள், 82. தம்பதியர், மந்தங்காடு விவசாய தோட்டத்தில் வசித்து வந்-தனர். இவர்களது மகன் வெற்றிவேல், சில ஆண்-டுகளுக்கு முன் இறந்தார். மருமகள் தமிழ்ச்-செல்வி, 63, கோபிநாத், 38, ஆகிய இருவரும், கந்-தம்பாளையத்தில் வசிக்கின்றனர். மகன் இறப்-புக்கு பின், உறவினர்கள் யாரும் இவர்களை கவ-னித்து பராமரிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை, இருவரும் தோட்-டத்து வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. அருகில் வசிப்பவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது. நல்லார் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்-சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ