உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொங்கல் சிறப்பு தொகை வழங்க கோரி கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பொங்கல் சிறப்பு தொகை வழங்க கோரி கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டை: கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., அலுவலகம் முன், புரட்சிகர தொழிலாளர்கள் கட்சி மற்றும் குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச்-சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்-தது. புரட்சிகர தொழிலாளர்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் வெங்கடாசலம், மாநில ஆலோசகர் நல்வினை விஸ்வராஜ் ஆகியோர் பேசினர். இதில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியத்தில் பொங்கல் சிறப்பு தொகை வழங்க வேண்டும்; பென்ஷன் உதவித்தொகையை, 3,000 ஆக உயர்த்த வேண்டும்; விபத்து காப்பீட்டு தொகையை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். வெள்ளக்-கல்பட்டி கிராமத்தில் கழிவுநீர் பிரச்னை மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அங்குள்ள நடுநிலை பள்ளியை மேல்நிலை பள்-ளியாக தரம் உயர்த்த வேண்டும். நாமகிரிப்பேட்-டையை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா அமைக்க வேண்டும். நிலுவையில் உள்ள பைபாஸ் சாலை பணிகளை முடித்தல் உள்ளிட்ட, 21 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்-டனர். அப்போது, 'கோரிக்கைகள் நிறைவேற்றா-விட்டால், சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை