உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் சார்பில் சுதந்திர தின விழா

ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் சார்பில் சுதந்திர தின விழா

நாமக்கல்: ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 78வது சுதந்திர தின விழா, ரக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். ஊட்டச்சத்து நிபுணரும், சமூக செயற்பாட்டாளருமான மாயா மோகன், சுதந்திரம் கிடைத்த வரலாறு குறித்து சிறப்புரை ஆற்றினார்.ரக்ஷா பந்தன் குறித்து ஆடிட்டர் மோகன் உரையாற்றினார். விழாவில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக தேசியக்கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ