உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பனை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

பனை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

ப.வேலுார், ப.வேலுார் அருகே, சோழசிராமணி, சத்திபளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 51; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறி நுங்கு பறித்துள்ளார். அப்போது, நிலைதடுமாறி பனை மரத்தின் உச்சியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், தலை, கால்களில் பலத்த காயமடைந்தார். பழனிசாமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று பழனிசாமி இறந்தார். ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை