உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கரூர்: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் ஏற்பட்ட குழிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் வழியாக கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலங்களுக்கு நாள்தோறும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கரூரில் இருந்து கோவை செல்லும் சாலைகளில், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.சாலையின் நடுப்பகுதியில் குழிகள் அதிகம் உள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, க.பரமத்தியில் இருந்து தென்னிலை வரை உள்ள குழிகளை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை