உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு ரூ.4,500 அபராதம்

பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு ரூ.4,500 அபராதம்

நாமகிரிப்பேட்டை: தமிழக அரசு, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்ப-டுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் டம்-ளர்கள் போன்றவற்றுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபா-டில்லை.இதனால், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., பகுதி-களில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்-கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., அலுவலர் யோகேஸ்வரன் மற்றும் துப்புரவு மேற்பார்வை-யாளர் காளியப்பன் தலைமையிலான ஊழி-யர்கள், நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.இவர்கள், ஆத்துார் பிரதான சாலை, புதுப்பட்டி சாலை, கடைவீதி, அரியாகவுண்டம்பட்டி ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்கள் விற்கப்ப-டுகிறதா என ஆய்வு நடத்தினர். இந்த சோத-னையின் போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த, 6.5 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் அதிகாரி-களால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்-பனை செய்த, 8 கடைகளின் உரிமையாளர்க-ளுக்கு, மொத்தம், 4,500 ரூபாய் அபராதம் விதிக்-கப்பட்டு உடனடியாக வசூல் செய்யப்பட்டது.இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ