உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுபாளையம் சுடு-காடு அருகே, நேற்று மதியம், 2:00 மணிக்கு, எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடு-பட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த, 'டாடா சுமோ' காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 11 மூட்டைகளில், 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்-றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர், முத்துகாப்பட்டி, புதுத்தெ-ருவை சேர்ந்த கோவிந்தராஜ், 49, என்பது தெரியவந்தது.மேலும், பொது மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, இட்லி மாவு அரைத்து விற்பனை செய்வ-தற்கும், வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்-பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. ரேஷன் அரிசியை கடத்திய கோவிந்தராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 550 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை