உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம்,சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று, கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை முதல் மாலை வரை, மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடந்தது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை