உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

சேந்தமங்கலம், : கார்த்திகை சனிக்கிழமையையொட்டி, நேற்று சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள நைனா மலை ஆஞ்சநேயர், மரூர் பட்டி பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, மரூர்பட்டி பக்த ஆஞ்சநேயர் கோவில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை பால், தயிர், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதேபோல், மலை உச்சியில் உள்ள வரதராஜ பெருமாளுக்கும் அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை