உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் பகுதிகளில் கொட்டிய திடீர் மழை

ராசிபுரம் பகுதிகளில் கொட்டிய திடீர் மழை

ராசிபுரம்,: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை பெய்த திடீர் மழையால் சாலைகள் வெறிச்சோடியது. ராசிபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக-மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு திடீரென காற்றுடன் கன மழை பெய்தது. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியான அணைப்பாளையம், கவுண்டம்பாளையம், ஆண்ட-கலுார் கேட், காக்காவேரி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை உள்-ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது. குளிர் காற்று வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை