உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செல்படும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கரூர் மண்டல துணைத்தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். அதில், தமிழக மின்வாரியத்தில், 63,000 காலி பணியிடங்கள் உள்ள நிலையில், மின்வாரிய அனைத்து பணிகளையும் மேற்-கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்களை, கள உதவியாளராக மாற்ற வேண்டும். குடும்பத்தை பிரிந்து, பல கி.மீ., துாரத்தில் பணியமர்த்தப்பட்டு கடுமையான பணிச்சுமையிலும் பணி மேற்-கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மின்-வாரிய நிர்வாக குழு அனுமதி வழங்கியும் பணியமர்த்தப்ப-டாமல் நிலுவையில் உள்ள, 5,499 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ