மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
மேட்டுப்பாளையம்:மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், கனமழை பெய்து வருவதால், பில்லுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நான்காவது நாளாக பில்லுார் அணை நிரம்பி வழிகிறது. கடந்த ஒரு வாரமாக, பில்லுார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. அதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த,16ம் தேதி பில்லுார் அணை நிரம்பியது. தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து, 15,000 ஆயிரம் கன அடிக்கு குறையாமல் வந்து கொண்டுள்ளது. ஏற்கனவே பில்லுார் அணை நிரம்பி உள்ளதால், அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுகின்றனர். இதனால் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சியில், 216 மி.மீ., மழையும், அப்பர் பவானியில், 120 மி.மீ., குந்தாவில், 42 மி.மீ., பரளியில், 11 மி.மீ., பில்லூர் அணை பகுதியில், 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு, 14 ஆயிரம்,160 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நான்காவது நாளாக பில்லுார் அணை நிரம்பி வழிகிறது. மேலும் அணைக்கு வருகின்ற தண்ணீரை, அப்படியே ஆற்றில் திறந்து விடுவதால், பவானி ஆற்றிலும் நான்காவது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
03-Oct-2025