உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராமத்திற்குள் யானை: விவசாய பயிர்கள் சேதம்

கிராமத்திற்குள் யானை: விவசாய பயிர்கள் சேதம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, நெல்லியாளம் வாழவயல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு யானைகள் வந்துள்ளது. தேயிலை தோட்டம் வழியாக வந்த யானைகள் கிராமத்திற்குள் புகுந்து, வீடுகள் முன் முகாமிட்டன. இதனால் வீட்டினுள் இருந்தவர்கள் அச்சத்தில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் யானைகள் அங்கிருந்து அகலாமல், விவசாய தோட்டத்திற்குள் புகுந்து வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தியது. விடியும் வரை யானைகள் கிராமத்தில் முகாமிட்டதால், பொது மக்கள் சிரமப்பட்டனர். தொடர்ந்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி