உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாடிய மலர்கள் அகற்றம் தொட்டிகளில் புதிய மலர்கள்

வாடிய மலர்கள் அகற்றம் தொட்டிகளில் புதிய மலர்கள்

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், வாடிய மலர் தொட்டிகளை அகற்றி, புதிய மலர்கள் மாடங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 126 வது மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில், 19 வது ரோஜா கண்காட்சியும் நேற்று நிறைவடைந்தது. இ--பாஸ் நடைமுறை இருந்தும், பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மலர்களை ரசித்தனர்.கண்காட்சி விழா நிறைவடைந்த நிலையிலும், சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்கிறது. நாள் முழுவதும் கொட்டிய மழையிலும், மலர்களை ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்வதை காண முடிகிறது.கடந்த, 10 நாட்களாக மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மலர்கள், வாடிய நிலையில், அவற்றை அகற்றி, புதிய மலர் தொட்டிகளை பூங்கா நிர்வாகம் மாடங்களில் காட்சிப்படுத்தியுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி