உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்

வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்

ஊட்டி;கோரகுந்தா வனத்தில் பரவிய காட்டு தீயால் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சாம்பலானது.நீலகிரி வனக்கோட்டம், கோரகுந்தா வனப்பகுதி பல ஏக்கர் கொண்டதாகும். தமிழக - கேரளா எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விலை உயர்ந்த காட்டு மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் வன விலங்குகள் அதிகளவில் உலா வருகிறது. கோடை வறட்சியால் கோரகுந்தா வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம், கேரளா வனத்தில் பரவிய காட்டு தீ, வராகா பள்ளம் வனத்திலிருந்து மேல் நோக்கி பரவி கோரகுந்தா வனப்பகுதியில் பரவியது. கட்டுக்கடங்காத காட்டு தீ பரவலால் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. வனத்தில் இருந்த சீகை, கற்பூரம் மற்றும் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலானது. வனத்துறையினர் ஆங்காங்கே தீ தடுப்பு கோடுகள் அமைத்துள்ளனர். ஆனாலும், கடும் வறட்சியால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கோரகுந்தா வனப்பகுதியில் ரேஞ்சர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

200 இடங்களில் தீ பரவல்

நீலகிரி வனக்கோட்டத்தில், இம்முறை வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, பந்தலுார், கூடலுார் தாலுகாவுக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி என, கடந்த மார்ச், ஏப்., மாதங்களில், 200 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயால் வனப்பகுதி, வருவாய் நிலம், பட்டா என, பல ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை