மேலும் செய்திகள்
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
07-Oct-2025
மேட்டுப்பாளையம்: கேரளா மாநிலம் எல்லையில் அமைந்துள்ளது காரமடை அருகே உள்ள முள்ளி பகுதி. இவ்வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கு செக் போஸ்ட்டில் அனுமதியில்லை. இதனை அறியாமல் மேப் செயலி உதவியுடன் வந்து இளைஞர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கேரளாவுக்கு செல்ல முடியாமல் 40 கி.மீ., சுத்தி செல்கின்றனர்.கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முள்ளி, தமிழகம் கேரளா எல்லைப் பகுதி ஆகும். முள்ளையில் தமிழகம் மற்றும் கேரளா என இருமாநிலங்களின் வனத்துறை சார்பில் செக்போஸ்ட் உள்ளது. முள்ளி மிகவும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இருமாநிலங்களிடையே முள்ளி வாயிலாக போக்குவரத்து இருந்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு முள்ளி செக் போஸ்ட் கோவை மாவட்ட வனத்துறையால் மூடப்பட்டது. வனவிலங்குகள் பாதுகாப்பு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு போன்ற காரணங்களினால் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து செக் போஸ்ட் வழியாக தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் செக்போஸ்ட் வழியாக கேரளாவின் புதூர் பகுதி மக்களும், தமிழகத்தின் முள்ளி, குண்டூர், பில்லூர் அணை பகுதி மக்கள் என உள்ளூர் கிராம மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். முள்ளி செக் போஸ்ட் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் மூடப்பட்டதால், கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், விவசாயிகள், வியாபாரிகள் முள்ளி வழியாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல், காரமடை முள்ளி வழியாக கேரளா மாநிலம் அட்டப்பாடி, கோழிக்கோடு பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தமிழக சுற்றுலா பயணிகளும் தவித்து வருகின்றனர்.இதனிடையே முள்ளி செக்போஸ் தடை விதிக்கப்பட்டது தெரியாமல், இளைஞர்கள் சிலர் மேப் செயலிகள் வாயிலாக கேரளவுக்கு செல்ல முள்ளி வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் பைக்குகள், கார்களில் அதிக அளவில் இளைஞர்கள் வருகின்றனர். அவர்கள் வனத்துறையினரால் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால் இளைஞர்கள் மீண்டும் வந்த வழியே கோபனாரி சென்று அங்கிருந்து கேரளா மாநிலம் செல்கின்றனர் அல்லது பில்லூர் வழியாக ஊட்டிக்கு சென்று அங்கிருந்து கேரளா மாநிலம் வயநாடு செல்கின்றனர். முள்ளியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் கேரளாவுக்கு செல்ல, அனுமதி மறுப்பால் 40 கிலோ மீட்டர் சுத்தி செல்லும் நிலை உள்ளது. இது குறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், முள்ளி செக்போஸ்ட்டில் உள்ளூர் மக்கள் மட்டுமே மருத்துவம் உள்ளிட்ட மிக முக்கிய தேவைகளுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேப் செயலிகளை நம்பி இங்கு வர வேண்டாம். அனுமதி கிடையாது, என்றனர்.கேரளா அரசு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தாவளம் பகுதியில் இருந்து முள்ளி வரை ரூ.140 கோடியில் இருவழி சாலை அமைத்துள்ளது. அங்குள்ள அரசியல் கட்சியினர் முள்ளி செக்போஸ்ட்டை தமிழக அரசு திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
07-Oct-2025