உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  காட்டு யானை உயிரிழப்பு வனத்துறை விசாரணை

 காட்டு யானை உயிரிழப்பு வனத்துறை விசாரணை

கூடலுார்: முதுமலை, கார்குடி வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி வனச்சரக்கத்திற்கு உட்பட்ட, கிரஸ்கட் வனப்பகுதியில் நேற்று முன்தினம், மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெண் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சகர் பாலாஜி உடலை ஆய்வு செய்தார். தொடர்ந்து, முதுமலை துணை இயக்குனர் கணேசன், பறக்கும் படை உதவி வனப் பாதுகாவலர் கிருபாகரன் மற்றும் வனத்துறையினர் அதன் உடலை நேற்று, ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் யானை உடலை பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில்,'இறந்த பெண் யானைக்கு, 35 வயது இருக்கும். பிரேத பரிசோதனையில் உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. ஆய்வுக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் பரிசோதனை முடிவு கிடைத்த பின் உயிரிழப்புக்கு வேறு காரணம் இருப்பின் தெரியவரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை