உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மஞ்சூர் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

மஞ்சூர் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

மேட்டுப்பாளையம், : கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட காரமடை மஞ்சூர் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் காரமடையில் இருந்து தோலம்பாளையம் சாலை வழியாக வெள்ளியங்காடு, குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை இச்சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே செல்கிறது. இதனால், இச்சாலையில் வன விலங்குகள் அடிக்கடி உலா வருவது வழக்கம். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மஞ்சூர் வழியாக செல்வதற்கு இச்சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். இதனிடையே காரமடை-மஞ்சூர் சாலையில் கடந்த சில நாட்களாக யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், ''வனத்துறையினர் ரோந்து பணியில் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளை கண்டால், அதனை அவர்களே விரட்ட முயற்சி மேற்கொள்ளக்கூடாது. என்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி