உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ராமேஸ்வரத்திலிருந்து மார்ச் 20 ல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்றிரவு இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகுகளில் இருந்த 20 மீனவர்களை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து மேலும் ராமேஸ்வரத்தை சேர்ந்த இரு படகுகளை மடக்கிப்பிடித்த இலங்கை கடற்படை வீரர்கள் அதில் இருந்த மீனவர்கள் ஜெகன் 46, அந்தோணிகாட்சன் 37, ராஜசேகர் 45, ராஜாமுகமது 50, ரஞ்சித் 37, ராமு 42, அந்தோணி 45, மோகன் 38, மனோகரன் 45, சேகரன் 47, முருகன் 48, ஜெயராஜ் 51, ஆகியோரை கைது செய்தனர்.ஒரே நாளில் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து ஊர்க்காவல்துறை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம், வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை