உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்கள் சிறைக்காவல் செப்., 4 வரை நீட்டிப்பு

மீனவர்கள் சிறைக்காவல் செப்., 4 வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன், தங்கச்சிமடத்தில் இருந்து ஆக., 9ல் நான்கு நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 35 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, புத்தளம் சிறையில் அடைத்தனர். இவர்களை விடுவிக்க கோரி, பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.இந்நிலையில், வாய்தா நாளான நேற்று 35 மீனவர்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களின் சிறைக்காவலை செப்., 4 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர்களின் விடுதலையை எதிர்பார்த்து, காத்திருந்த தமிழகத்தில் உள்ள குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை