உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்டு எமனேஸ்வரம் கண்மாயை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

காட்டு எமனேஸ்வரம் கண்மாயை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

ராமநாதபுரம், - கமுதி தாலுகா பெரிய ஆனைக்குளம் காட்டு எமனேஸ்வரம் கண்மாயில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி துார்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் மாவட்ட காவிரி-வைகை-கிருதுமால்- குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், மாவட்டச் செயலாளர் மலைச்சாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: பெரிய ஆனைக்குளத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டு எமனேஸ்வரத்தில் கண்மாயில் தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றி துார்வார வேண்டும்.கண்மாய் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை