| ADDED : ஜூன் 20, 2024 04:41 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சிவன் கோயில், வெளிப்பட்டிணம் ஆதி ரெத்தினேஸ்வரர் கோயில், குமரய்யா கோயில் பகுதியில் உள்ள சிவஞானேஸ்வரர் கோயிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் முடிந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது.* பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நேற்று மதியம் 3:00 மணிக்கு பிரதோஷ நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நந்தி வாகனத்தில் விசாலாட்சி, சந்திரசேகர சுவாமி எழுந்தருளினர். பிரகாரங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.எமனேஸ்வரம் எமனேஸ்வனமுடையவர் கோயிலில் உள்ள சன்னதி பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சந்தன காப்பு, வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் நந்திக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டது.திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வ திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவசாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.