உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவெற்றியூர் விலக்கு ரோட்டில் பேரிகார்டு அமைக்க கோரிக்கை

திருவெற்றியூர் விலக்கு ரோட்டில் பேரிகார்டு அமைக்க கோரிக்கை

திருவாடானை,: திருவெற்றியூர் விலக்கு ரோட்டில் பேரிகார்டு அமைக்க வலியுறுத்தப்பட்டது.மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே திருவெற்றியூர் விலக்கு ரோடு உள்ளது. இந்த இடத்தில் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் நாகநாதன் கூறியதாவது:மூன்று ரோடுகள் இணப்பாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. டூவீலர்களில் செல்பவர்கள் அதிக வேகமாக செல்லும் போது வாகனங்கள் வருவது தெரியாமல் மோதி விபத்திற்குள்ளாகின்றனர். எனவே அந்த இடத்தில் பேரிகார்டு அமைக்க வேண்டும்.மேலும் திருவாடானை வாரச்சந்தை நடைபெறும் போது மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்படும் கடைகளால் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் போலீசார் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ