உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கீழக்கரை: -கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயில் உள்ளது. நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கனவில் வந்த கணேசருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றியும் விநாயகர் துதி பாடல்களை பாடியும் பஜனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பு தெப்பக்குளம் கரையில் உள்ள கைலாச விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பக விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி