வேளாண் துறை அறிவிப்பு
பெருநாழி,: பிரதமரின் விவசாயிகள் கொடை நிதி திட்டத்தில் விவசாயிகள் இடுபொருள்கள் பெற்றுக் கொள்ளலாம் என கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி தெரிவித்தார். அவர் கூறியதாவது: பிரதமரின் விவசாயிகள் கொடை நிதி திட்டத்தில் விவசாயிகள் இடுபொருள்கள் வாங்குவதற்காக ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது.இப்பணம் கிடைக்காத விவசாயிகள் தங்கள் வணங்கி கணக்குடன் இணைத்துள்ள அலைபேசி எண்ணை ekyc மூலமாக இ--சேவை மையத்தில் PMKSN இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றார்.