உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடர் விடுமுறை: காரங்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் குஷி       

தொடர் விடுமுறை: காரங்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் குஷி       

திருவாடானை : தொண்டி அருகே காரங்காட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு சவாரி சென்று மகிழ்ச்சியடைந்தனர். தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டதால் வெளிமாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. அலையாத்தி காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டுரசிக்கலாம். பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, விருதுநகர் போன்ற வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகில் பாதுகாப்பு கவச உடையுடன் கடலுக்குள் மாங்ரோவ் காடுகள், பறவைகளை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை