உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணி

 பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். தமிழகத்தில் 2009 ஜூன் 1 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370, அதன் பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வேறு வேறு அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021ல் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 5 ஆண்டு கால ஆட்சி முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணி புரிகின்றனர். அடுத்தக்கட்டமாக டிச.,24 முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை