உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒரே பரிசலில் 20 பேர் பயணம் விபரீதத்துக்கு முன் விழிப்பரா?

ஒரே பரிசலில் 20 பேர் பயணம் விபரீதத்துக்கு முன் விழிப்பரா?

மேட்டூர் : காவிரியாற்றில் ஒரே பரிசலில், 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்-பற்ற முறையில் பயணிப்பதால், விபரீதம் ஏற்படும் முன் அதிகா-ரிகள் விழித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேட்டூர் அணையின் கோட்டையூரில் இருந்து அதன் மறுக-ரையில் உள்ள ஒட்டனுாருக்கு பயணியர் விசைப்படகு இயக்கப்-பட்டது. அதன் ஒப்பந்தம் முடிந்த நிலையில், விலைப்புள்ளி அதிகம் இருந்ததால், ஏலம் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வர-வில்லை. தற்போது அணை நீர்மட்டத்துக்கேற்ப, கோட்டையூர் நீர்பரப்பு பகுதியிலும் காவிரியாற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் கடந்த இரு மாதங்களாக, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்-றிய கமிஷனர் உத்தரவு மூலம் குறுகிய அகலம் கொண்ட காவிரி-யாற்றில் பெரிய பரிசலில், பயணியரை ஏற்றிச்சென்று மறுக-ரையில் விடுகின்றனர்.அதற்கு கட்டணமாக பயணியருக்கு, 20 ரூபாய், இருசக்கர வாக-னங்களுக்கு, 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதற்கு பயணச்-சீட்டு வழங்குவதில்லை. அத்தொகையை பரிசல் ஓட்டும் ஊழியர்-களே வசூலித்து, ஒன்றிய அலுவலரிடம் ஒப்படைக்கின்றனர்.ஆனால் ஒரே பரிசலில், 20க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்-றனர். அவர்கள் பாதுகாப்பு உடைகள் அணியாமல், ஆபத்தான முறையில் காவிரி ஆற்றை கடக்கின்றனர்.இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் விழித்து, பயணியரை பாதுகாக்க வேண்டும். அத்துடன் கட்டண சீட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை