உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரைவு வழிகாட்டி பதிவேடு கருத்து தெரிவிக்க அழைப்பு

வரைவு வழிகாட்டி பதிவேடு கருத்து தெரிவிக்க அழைப்பு

சேலம் : வரைவு வழிகாட்டி பதிவேடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை சீரமைத்தல் தொடர்பாக, மைய மதிப்பீட்டு குழு, கடந்த ஏப்., 26ல் நிர்ணயித்த நெறிமுறை கோட்டுபாட்டுக்கு இணங்க, சேலம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, மக்கள் பார்வையிடும்படி, தாசில்தார், சார் - பதிவாளர் உள்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதன் விபரங்களை, www.tnreginet.gov.inஎன்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளும்படி வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை, கருத்துரு இருப்பின், 15 நாட்களுக்குள், கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணை குழுவிடம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மதிப்பீட்டு துணை குழுவின் அறை எண்: 313ல் நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ