உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்

அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஏக்கரில், 5 வகை அரளி நடவு செய்யப்படுகின்றன. தினமும் அறுவடை செய்யப்படும் அரளி, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. சமீபத்தில் பெய்த மழையால் அரளி உற்பத்தி அதிகரித்து விலை சரிந்துள்ளது. சேலத்தில், 1 கிலோ சாதா அரளி கடந்த, 4, 5ல், 60 ரூபாய்க்கு விற்றது. 6ல், 50 ரூபாய்; 7ல், 20 ரூபாயாக சரிந்தது. கடந்த இரு நாட்களாக, 30 ரூபாய்க்கு விற்பனையானது. இதுகுறித்து அரளி விவசாயிகள் கூறுகையில், 'மழையால் காய்ந்த செடிகள் துளிர் விட்டு வளர்ந்து மகசூல் தந்துள்ளது. 1 கிலோ அரளி பறிக்க கூலி, 50 ரூபாய் ஆகிறது. அதை விட குறைவாக விலை கிடைப்பதால் கிலோவுக்கு, 20 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பூ பறிக்காமல் செடியிலேயே விடுகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை