உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 20ல் தொடக்கம்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 20ல் தொடக்கம்

சேலம்: இந்திய அரசு மத்திய பனை பொருட்கள் நிறுவனம்(கே.வி.ஐ.சி.,) சார்பில், சேலம், 4 ரோடு, சாமுண்டி வளாகத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 20 முதல், ஜூலை, 1 வரை நடக்க உள்ளது. இதில் தங்கம் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரைகல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, 'ஹால்மார்க்' தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதில், 18 வயது நிரம்பிய இருபாலரும் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை. ஆனால், 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். பயிற்சி முடிவில், இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.இதையடுத்து தேசிய கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோர், 3 மார்பளவு புகைப்படம், முகவரி, கல்வி சான்றிதழ்களுடன், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து பயிற்சி கட்டணமாக, 6,254 ரூபாய் செலுத்த வேண்டும். கூடுதல் விபரம் பெற, 94437 28438 என்ற எண்ணில் அழைக்கலாம்.------------------------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி