உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இல்லம் தேடி கல்வி 2.0 தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி 2.0 தன்னார்வலர்களுக்கு பயிற்சி

வீரபாண்டி: வீரபாண்டி வட்டாரத்தில், இல்லம் தேடி கல்வி-2.0 திட்டத்தின் கீழ், 261 மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர் என, 261 பேர் உள்ளனர். இவர்களுக்கு கற்றல் கற்பித்தல் மற்றும் மாணவர்களை எளிதாக கவரும் வழிமுறைகள் குறித்து, மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு வட்டார வள மையத்தில் அலுவலர் ரத்தினவேல் தலைமையில் கடந்த, 26ல் துவங்கியது.ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் கிங்ஸ்லி, தன்னார்வலர்க-ளுக்கு திட்டத்தின் நோக்கம், மையங்களின் செயல்பாடுகள், கற்-பித்தல் வழிமுறை, எளிய முறையில் மாணவர்களை கவர்வது எப்படி என்பன போன்ற பயிற்சிகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை