உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜெருசலேம் புனித பயணம் மானியம் பெற அழைப்பு

ஜெருசலேம் புனித பயணம் மானியம் பெற அழைப்பு

சேலம்: தமிழகத்தில் அனைத்து பிரிவுகளை சார்ந்த கிறிஸ்தவர்கள் 600 பேர் பயன்பெற, ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய, 550 பேருக்கு தலா, 37,000 ரூபாய், 50 கன்னியாஸ்தி-ரிகள், அருட்சகோதரிகளுக்கு தலா, 60,000 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படுகிறது.அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த, 1க்கு பின் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள், இ.சி.எஸ்., முறையில் நேரடி மானியம் பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்-பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், விண்-ணப்ப படிவத்தை கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணையத்திலும், படி-வத்தை பதிவிறக்கிக்கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 2026 பிப்., 28க்குள், உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை