உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடக்கம்

நாளை கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடக்கம்

சேலம், சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் பிரமோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு, அங்குரார்பணம், யாகசாலை பூஜை, இன்று மாலை நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா, மதியம், 12:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதி உலா, மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்க உள்ளது.வரும், 6 மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா; 10 காலை, 8:30 மணிக்கு தேரோட்டம்; 11ல் தீர்த்தவாரி, 12ல் சப்தாவரணம்; 13ல் வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். இதை முன்னிட்டு, தேர்வீதி ராஜகணபதி கோவில் எதிரே நிறுத்தப்பட்டுள்ள தேரில் தகர கொட்டகை அகற்றப்பட்டு, சாரம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை