போலீசாரை மிரட்டிய போதை டிரைவர்
சேலம்: சேலம், வ.உ.சி., மார்க்கெட்டில் நேற்று முன்தினம், போக்குவ-ரத்து பிரிவு போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வழி பாதையில் வந்த ஆட்டோவை நிறுத்தும்படி, 'சைகை' காட்-டினர். ஆட்டோ நிற்காமல் சென்றதால், போலீசார் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். அப்போது, மது அருந்திய நிலையில் இருந்த, டிரைவர், ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து எஸ்.ஐ., திருநாவுக்கரசு புகார்படி, டவுன் போலீசார் விசாரித்ததில், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வெங்-கடேஷ், 30, என தெரிந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.