| ADDED : மார் 29, 2024 01:37 AM
மேட்டூர்:நாமக்கல்,
குமாரபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டசபரி, 38. மேட்டூர் சப் -
கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர். ஈரோடு,
அந்தியூரை சேர்ந்தவர் நர்மதா, 37. தேர்தல் துணை தாசில்தார். 8
ஆண்டுகளுக்கு முன், இடைப்பாடியில் ஒன்றாக பணிபுரிந்த இருவரும்
காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகன் மவுலி
ஆதித்யா, 4, உள்ளார்.சமீபகாலமாக மேட்டூர் சப் - கலெக்டர்
அலுவலகத்தில் வேலை செய்த இருவரும், மேட்டூர் மைக்கேல் தோட்டத்தில்
குடும்பத்துடன் வசித்தனர். நர்மதாவுக்கு இருமுறை கருச்சிதைவு
ஏற்பட்ட நிலையில், 3வதாக மகன் பிறந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அவர்,
மருத்துவ சிகிச்சை செய்து மாத்திரைகளை தொடர்ச்சியாக
சாப்பிடுகிறார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு நர்மதாவுக்கு
வேலைப்பளு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00
மணிக்கு, வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் துாக்கு போட்டு
தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், மேட்டூர் அரசு
மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேட்டூர் சப் -
கலெக்டர் பொன்மணி, அலுவலர்கள் இறுதி அஞ்சலிக்கு பின், அவரது உடல்
அடக்கம் செய்வதற்கு, சொந்த ஊரான அந்தியூருக்கு எடுத்து
செல்லப்பட்டது. மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.