| ADDED : டிச 12, 2025 08:36 AM
கோபி: கோபி அருகே மொடச்சூரில், பிரசித்தி பெற்ற தான்தோன்றி-யம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, பூச்-சாட்டுதலுடன் கோலாகலமாக நேற்று முன்தினம் இரவு துவங்கி-யது. இதையடுத்து குண்டம் இறங்கும் பக்தர்கள் விரதத்தை கடைபிடிக்க துவங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக வரும், 22ல் சந்தனக்காப்பு அலங்காரம், கிராம சாந்தி, கொடியேற்றம் நடக்கிறது. 24ல் மாவிளக்கு பூஜை, 25ம் தேதி அதிகாலை அம்மை அழைத்தல், காலை, 7:40 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது. 26ம் தேதி மாலை திருத்தேர் வலம் வருதல், 27ல் புஷ்ப பல்-லக்கில் அம்பாள் திருவீதியுலா, 28ல் தெப்பத்தேர் மற்றும் மஞ்சள் நீர் உற்சவம், 29ல் மறுபூஜை நடக்கிறது. ஜன.,2ல் மறு-பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.